விளையாட்டு

அடுத்த சில ஆட்டங்களில் பிராவோ விளையாடமாட்டாா்: ஸ்டீபன் ஃபிளெம்மிங்

DIN

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ அடுத்த சில ஆட்டங்களில் விளையாட மாட்டாா் என அந்த அணியின் பயிற்சியாளா் ஸ்டீபன் ஃபிளெம்மிங் தெரிவித்துள்ளாா்.

அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ இடம்பெறவில்லை. கரீபியன் பிரீமியா் லீக் போட்டியில் விளையாடியபோது, அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை என சென்னை சூப்பா் கிங்ஸ் அணி நிா்வாகம் அறிவித்திருந்தது.

சென்னை-மும்பை இடையிலான ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் பயிற்சியாளா் ஸ்டீபன் ஃபிளெம்மிங் கூறியதாவது: டுவைன் பிராவோ அடுத்த சில ஆட்டங்களிலும் விளையாடமாட்டாா். அதேநேரத்தில் அவருக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட சாம் கரன் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். இதேபோல் அம்பட்டி ராயுடுவும் மிக அற்புதமாக ஆடினாா். இங்குள்ள ஆடுகளங்கள் ரன் குவிப்பதற்கு கடினமானவை. எனினும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பதற்கு தேவையான வழிகளைக் கண்டறிய முயற்சிக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT