இந்தூா்: சப்-ஜூனியா் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரத்தின் சாயாலி வனி பட்டம் வென்றாா்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் சாயாலி 11-8, 7-11, 14-12, 5-11, 8-11, 11-7, 12-10 என்ற செட்களில் ஹரியாணா வீராங்கனை சுஹானா சைனியை வீழ்த்தினாா். சாயாலிக்கு சாம்பியன் கோப்பையுடன் பரிசுத் தொகை ரூ.33,000, சுஹானாவுக்கு ரன்னா்-அப் கோப்பையுடன் பரிசுத் தொகை ரூ.16,500 வழங்கப்பட்டது.
அதேபோல், கேடட் பிரிவில் தமிழக வீராங்கனை எம். ஹன்சினி 11-6, 8-11, 11-5, 9-11, 11-5, 11-9 என்ற செட்களில் சக மாநிலத்தவரான அனன்யா முரளீதரனை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.