விளையாட்டு

காலே டெஸ்ட்: இலங்கை 333 ரன்கள் முன்னிலை

DIN

காலேவில் நடைபெற்று வரும் இலங்கை பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் பாபர் அசாம் மட்டுமே 119 ரன்களை எடுத்தார். அடுத்து ஆடிய இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் பெர்னாண்டோ 64 ரன்கள், குஷால் மெண்டிஸ் 76 ரன்கள் எடுத்தனர். சண்டிமால் 86 ரன்களுடனும் பிரபாத் ஜெயசூர்யா 4 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 3ஆம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை அணி 329 ரன்களுக்கு 9 விக்கெட்டிகளை இழந்துள்ளது. 

பாகிஸ்தான் சார்பில் மொஹம்மது நவாஸ் 5 விக்கெட்டுகளும், யஷிர் ஷா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஹாசன் அலி 1 விக்கெட்டும் எடுத்தார்.

மொத்தமாக இலங்கை அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT