செஸ் இலிம்பியாட் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் நந்திதா வெற்றியடைந்துள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
மகளிர் பிரிவில் இந்திய சி அணியில் இடம்பெற்றிருந்த நந்திதா, சிங்கப்பூர் வீராங்கனையை வென்றார்.
மேலும் இரண்டாவது சுற்றில் மகளிர் இந்திய சி அணி வீராங்கனை கர்வாடே வெற்றியடைந்துள்ளார்.