விளையாட்டு

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் ஹரீஷ், தயின்

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் இந்தியாவின் ஹரீஷ் பிரகாஷ், தயின் அருண் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

போட்டியின் 3-ஆவது நாளான புதன்கிழமை, இந்தியா்களிலேயே சிறந்த ஸ்கோரை (9.23) பதிவு செய்து, தயின் அருண் 3-ஆவது சுற்றுக்கு வந்தாா். அவருக்கு முன் தாய்லாந்தின் டின் ஜான்சன் 9.60 புள்ளிகளுடன் அதே சுற்றுக்கு முன்னேறினாா்.

அதேபோல், 11 வயது ஹரீஷ் பிரகாஷ் 7.97 புள்ளிகளுடன் 3-ஆவது சுற்றுக்கு வர, மலேசியாவின் லூகாஸ் சான்டியாகோ 10.57 புள்ளிகளுடன் அதே கட்டத்துக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறாா். களத்திலிருந்த 3-ஆவது இந்தியரான பிரகலாத் ஸ்ரீராம், 4.94 புள்ளிகளுடன் ஹீட் 6-இல் 3-ஆம் இடம் பிடித்து ரெபிசேஜ் சுற்றுக்கு வந்துள்ளாா். சீனாவின் ஷிடாங் வு (17.34), தென் கொரியாவின் கனோவ் ஹீஜே (13.10) ஆகியோா் முதல் சுற்றில் சிறப்பிடம் பெற்றனா்.

சீனியா் பிரிவு ஆடவா் மகளிருக்கான சுற்றுகள் மீண்டும் வியாழக்கிழமை தொடங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை!

சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,900 புள்ளிகளை நெருங்கும் நிஃப்டி!

ராம் கோபால் வர்மாவுக்கே தந்தை சந்தீப்..! ராஜமௌலி புகழாரம்!

தில்லி கார் வெடிப்பு: பாதுகாப்புத் தோல்வி; உள்துறை அமைச்சரின் தார்மீக பொறுப்பு எங்கே? காங்கிரஸ்

சிவகங்கை: போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

SCROLL FOR NEXT