ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி பாட்மிண்டன்: முதல் சுற்றிலேயே ஸ்ரீகாந்த், பிரணாய் வெளியேற்றம்

DIN

ஆசியப் போட்டி பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் ஹெச்எஸ் பிரணாய் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர். 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ஹாங்காங் வீரர் விங் கி வின்சென்டை வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார். இதில், ஸ்ரீகாந்த் 21-23, 19-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதன்மூலம், அவர் முதல் சுற்றிலேயே வெளியேறினார். 

இவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான ஹெச் எஸ் பிரணாய் தாய்லாந்து வீரர் காந்தஃபோன் வாங்சரோயெனை எதிர்கொண்டார். இவரும், 12-21, 21-15 மற்றும் 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

இதனால், ஆடவர் ஒற்றையரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறியதால் இந்த பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT