ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018

ஆசியப் போட்டி பாட்மிண்டன்: முதல் சுற்றிலேயே ஸ்ரீகாந்த், பிரணாய் வெளியேற்றம்

ஆசியப் போட்டி பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் ஹெச்எஸ் பிரணாய் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

DIN

ஆசியப் போட்டி பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் ஹெச்எஸ் பிரணாய் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர். 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ஹாங்காங் வீரர் விங் கி வின்சென்டை வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார். இதில், ஸ்ரீகாந்த் 21-23, 19-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதன்மூலம், அவர் முதல் சுற்றிலேயே வெளியேறினார். 

இவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான ஹெச் எஸ் பிரணாய் தாய்லாந்து வீரர் காந்தஃபோன் வாங்சரோயெனை எதிர்கொண்டார். இவரும், 12-21, 21-15 மற்றும் 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

இதனால், ஆடவர் ஒற்றையரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் முதல் சுற்றிலேயே வெளியேறியதால் இந்த பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

SCROLL FOR NEXT