கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

ராயுடு ஓய்வு: தேர்வுக்குழுவினரைக் குற்றம் சாட்டும் கெளதம் கம்பீர்! 

எழில்

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பட்டி ராயுடு இன்று அறிவித்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் 4-ம் நிலை வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வானார். அதன்பிறகு, இரு வீரர்களைப் புதிதாகச் சேர்த்த பிறகும் ராயுடுவைச் சீந்தவில்லை தேர்வுக்குழு. இதையடுத்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் தேர்வுக்குழுவினரின் தவறான முடிவுகளால் தான் ராயுடு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவினர் மிகவும் அதிருப்தியடைய வைத்துள்ளார்கள். அவர்களால் தான் ஓய்வு முடிவை ராயுடு எடுத்துள்ளார். அவர்களுடைய முடிவுகளைத்தான் இதற்குக் குற்றம் சாட்ட வேண்டும். இந்த 5 தேர்வுக்குழு உறுப்பினர்களும் எடுத்த ரன்களை ஒன்று சேர்த்தால் அது ராயுடு தன் கிரிக்கெட் வாழ்க்கையில் எடுத்த ரன்களை விடவும் குறைவாக இருக்கும். இந்த ஓய்வு அறிவிப்பினால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். ரிஷப் பந்த், மயங்க் அகர்வால் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்கள். ராயுடு இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதுகுறித்து ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT