FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்டில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டால்... என்ன சொல்கிறார் ஸ்டுவர்ட் பிராட்?

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டால், அது அதிர்ச்சியளிப்பதாக இருக்குமென ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஆகஸ்ட் 2024, 6:09 pm IST
மார்க் வுட் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டால், அது அதிர்ச்சியளிப்பதாக இருக்குமென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் விளையாடி முடித்த நிலையில், இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

போட்டியின் 4-வது நாளான இன்று இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் அணியுடன் களம் காணவில்லை. மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, 11-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை வீசிய மார்க் வுட் பெவிலியன் திரும்பினார். அதன்பின், அவர் பந்துவீச்சை தொடரவில்லை. அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டால், அது அதிர்ச்சியளிப்பதாக இருக்குமென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவரை பந்துவீச்சில் பயன்படுத்தினால் அது இங்கிலாந்து அணிக்கு ஆபத்தாக முடியும். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான பந்துவீச்சு வரிசை இங்கிலாந்து அணியிடம் உள்ளது.

இலங்கைக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் மார்க் வுட் களமிறக்கப்பட்டால், அது அதிர்ச்சியளிப்பதாக இருக்கும். ஓவலில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட்டை விளையாடவைக்க இங்கிலாந்து அணி முயற்சிக்க வேண்டும் என்றார்.

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments