FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா!

ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

Updated On : 1 டிசம்பர் 2024, 2:34 pm IST
ஜெய் ஷா - படம் | ஐசிசி
பகிர்:

ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வந்தார். ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்க்ளே மூன்றாவது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள 5-வது இந்தியர் என்ற பெருமை ஜெய் ஷாவைச் சேரும். அவருக்கு முன்பாக, ஐசிசியில் தலைவர் பொறுப்பில் ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், ஷஷாங் மனோகர், என்.ஸ்ரீநிவாசன் ஆகியோர் இருந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments