3ஆவது இடத்தில் இந்தியா: டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கு செல்லுமா?
ஆஸி. உடனான 3ஆவது டெஸ்ட் சமனில் முடிந்ததால் டபிள்யூடிசி தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது இந்திய அணி.
பிரிஸ்பேனில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி மழை சமனில் முடிந்தது. இந்திய அணி டபிள்யூடிசி தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.
டபிள்யூடிசி (உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமானால் முதலிரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும்.
பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் கடைசி நாளிலும் மழை குறுக்கிட்டதால் டிரா என அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
டபிள்யூடிசி தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திலும் தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும் நீடிக்கிறது.
இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறதா?
1. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும்.
2. ஆஸ்திரேலியா இந்தியாவுடன் 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் இலங்கையுடன் தோல்வியுற்றாலும் அது இந்தியாவை பாதிக்காது.
3. இந்தியா 1 வெற்றி, 1 டிரா செய்தால், ஆஸி. இலங்கையுடனான ஒரு டெஸ்ட்டிலாவது டிரா செய்ய வேண்டும்.
டபிள்யூடிசி தரவரிசை
1. தென்னாப்பிரிக்கா - 63.33 புள்ளிகள்
2. ஆஸ்திரேலியா - 58.89 புள்ளிகள்
3. இந்தியா - 55.88 புள்ளிகள்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.