FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

விராட் கோலி இன்னும் 2 சதங்கள் அடிப்பார்; முன்னாள் இந்திய வீரர் நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என முன்னாள் இந்திய வீரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Updated On : 21 டிசம்பர் 2024, 9:44 pm IST
விராட் கோலி (கோப்புப் படம்)
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என முன்னாள் இந்திய வீரர் சேட்டன் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி மிகவும் வலுவாக தொடங்கியது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பந்து போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியைத் தழுவியது. இரு அணிகளுக்கும் இடையிலான பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது.

3 சதங்கள் அடிப்பார்

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறி வரும் நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகள் அவர் மீதான நமது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அவர் நன்றாக விளையாடுவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் இரண்டு சதங்கள் அடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 3 சதங்கள் அடிப்பார் என கணித்திருந்தேன் என்றார்.

இந்த ஆண்டு அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து விராட் கோலி 614 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 376 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments