ரஷித் கான் படம் | AP
கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் அதிகமான ஆப்கன் வீரர்கள்..! ரஷித் கான் நெகிழ்ச்சி!

ஆப்கன் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமான ஆப்கானிஸ்தான் வீரர்கள் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியெனக் கூறியுள்ளார்.

DIN

ஆப்கன் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமான ஆப்கானிஸ்தான் வீரர்கள் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியெனக் கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2017இல் முதன்முதலாக ஐபிஎல் போட்டிக்கு தேர்வானார் ரஷித் கான். ஐபிஎல்-க்கு தேர்வான முதல் ஆப்கன் வீரரும் அவர்தான். அவரைத் தொடர்ந்து பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள்.

சிஎஸ்கே அணியில் நூர் அகமது, அல்லாஹ் கசான்ஃபர் மும்பை அணியிலும் தேர்வாகியுள்ளார். முகமது நபி, அகமதுல்லா ஓமர்சாய் பிரபலமானவர்கள்.

தற்போது, ரஷித் கான் அபுதாபியில் டி10 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். அங்கிருந்து ரஷித் கான் பேசியதாவது:

ஆப்கன் கிரிக்கெட்டின் வளர்ச்சி

ஐபிஎல் தொடரில் பல ஆப்கன் வீரர்கள் பலரும் தேர்வாகியுள்ளது ஆப்கனுக்கு நல்ல செய்தி. ஐபிஎல் உலகத்திலேயே மிகப்பெரிய கிரிக்கெட் தொடர். பல வீரர்கள் தங்களது சொந்த மண்ணுக்கு வருவது போன்றது இந்தத் தொடர். பலரும் தங்களுக்கான இடத்தை பிடிப்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது. இது ஆப்கன் கிரிக்கெட்டின் வளர்ச்சியைக் குறிக்கிறது. தேர்வான அனைவரும் சிறப்பாக ஐபிஎல் தொடரை முடிக்க மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன்.

டி10 தொடர் கடினமானது

டி10 தொடர் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமானது. பேட்டர்கள் அதிரடியாக ஆடுவதில் கவனமாக இருப்பார்கள். புதிய பந்தில் திருப்பத்தை ஏற்படுத்துவது கடினம். எப்படியாகினும் சரியான இடத்தில் பந்தினை வீசுவது முக்கியம். உங்களது சிறப்பான முயற்சியை அளிக்க வேண்டும்.

ஆடுகளத்தின் தன்மையும் எல்லைக் கோடுகளும் சிறிது நமக்கு உதவும். உங்களுக்கு திறமை இருந்தால் வெற்றி பெறலாம். சில நேரங்களில் பேட்டரை வீழ்த்த ஒரு நல்ல பந்து போதும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT