முகப்பு
கிரிக்கெட்

டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஹார்திக் பாண்டியா!

டி20 கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஹார்திக் பாண்டியா 3-வது இடத்திற்கு முன்னேறினார்.

Updated On : 9 அக்டோபர் 2024, 7:42 pm IST
பகிர்:

சர்வதேச டி20 கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ஹார்திக் பாண்டியா 3-வது இடத்திற்கு முன்னேறினார்.

குவாலியரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அசத்தலாக விளையாடிய ஹார்திக் பாண்டியா, 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39* ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல், பந்துவீச்சில் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

Advertisement

Advertisement

டெஸ்டில் அதிக 150* ரன்கள்: ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!

ஹார்திக் பாண்டியா

இதன் மூலம் ஹார்திக் பாண்டியா, டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசைப் பட்டியலில் 253 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் முதலிடத்திலும், 235 புள்ளிகளுடன் நேபாள அணி வீர திபேந்திர சிங் ஐரீ 2-வது இடத்திலும், 216 புள்ளிகளுடன் ஹர்திக் பாண்டியா 3-வது இடத்திலும் உள்ளனர்.

பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் ஹாரி புரூக்.. 6 இன்னிங்ஸில் 4 சதங்கள்!

தரவரிசைப் பட்டியல்

வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் 86* ரன்கள் அடித்து அசத்திய ரவீந்திர ஜடேஜா, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ரவீந்திர ஜடேஜா 468 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 358 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஜோ ரூட் தன்னலமற்றவர்..! இந்த சாதனையை முறியடிக்க நீண்ட காலமெடுக்கும்! ஸ்டோக்ஸ் புகழாரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments