பாகிஸ்தான் அணி.  K.M. Chaudary
கிரிக்கெட்

1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாக். வெற்றி! 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2 வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 366 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து 291 ஆல் அவுட்டானது. 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 221 ரன்கள் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸில் 144க்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக 2 சுழல்பந்து வீச்சாளர்கள் நோமன் அலி (11) சஜித் கான் (9) மட்டுமே 20 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள்.

1987க்குப் பிறகு 2 பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்கள். பாகிஸ்தானுக்கு இது 7ஆவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஜித் கான்.

சஜித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT