சதமடித்த சர்ஃபராஸ் கான், மழையினால் போட்டி பாதிப்பு.  
கிரிக்கெட்

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் பின் தங்கியுள்ளது.

DIN

இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த அக்.16 அன்று பெங்களூரில் தொடங்கியது. முதல்நாள் மழையினால் பாதிக்க 2ஆம் நாளில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. நியூசி. சார்பில் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார்.

3ஆம் நாள் இந்திய அணி 231/3 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, 4ஆவது நாளில் பேட்டிங் செய்த இந்திய அணி உணவு இடைவேளை வரை 344/3 ரன்கள் எடுத்துள்ளது.

சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் ரிஷப் பந்த் 53 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்தாலும் 2ஆவது இன்னிங்ஸில் வலுவாக விளையாடி வருகிறது. எளிதாக தோற்க வேண்டிய போட்டியினை டிராவை நோக்கி நகர்த்துகிறது இந்திய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

இந்தோனேசியாவில் ‘குரோக்’குக்குத் தடை

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,680 கோடி டாலராகச் சரிவு

லஞ்சம் பெற்ற வழக்கு: இரு சுங்க அதிகாரிகள் உள்பட மூவருக்கு 5 ஆண்டு சிறை -குருகிராம் நீதிமன்றம் தீா்ப்பு

நகரங்களைக் கைப்பற்றுங்கள்! போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு!

SCROLL FOR NEXT