FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

Updated On : 27 ஏப்ரல் 2025, 6:02 pm IST
இந்திய மகளிரணி - படம்: எக்ஸ் / பிசிசிஐ வுமன்.
பகிர்:

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடா் கொழும்பு பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதன் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்து இலங்கையை 137 ரன்களுக்கு சுருட்டியது.

Advertisement

Advertisement

இந்தியா சார்பில் ஸ்நேஹ ராணா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய இந்திய மகளிரணி 29.4 ஓவர்களில் 149/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக பிரதிகா ராவல் 50*, ஸ்மிருதி மந்தனா 43, ஹர்லீன் தியோல் 48* ரன்களும் எடுத்தார்கள்.

பிரதிகா ராவல் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் ஏப்.29ஆம் தேதி எதிர்கொள்கிறது.

ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடுகின்றன. அதில் டாப் 2 அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அதில் வெற்றிபெறும் அணியே முத்தரப்பு தொடரில் வென்றதாக அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments