உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஸான தென்னாப்பிரிக்கா.  படம்: டபிள்யூசிஎல்
கிரிக்கெட்

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் டபிள்யூசிஎல் (லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் ) தொடரில் விளையாடி வருகிறார்கள்.

இந்தத் தொடரில் நேற்று இரவு தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 195/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சர்ஜீல் கான் 76 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 16.5 ஓவர்களில் 197/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் 120, ஜேபி டுமினி 50 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இந்தப் போட்டியில் ஏபிடி வில்லியஸ் பாகிஸ்தான் பந்துவீச்சாளஎர்களை 360 டிகிரியில் சுழன்று சுழன்று அடித்தார். 47 பந்தில் சதம் அடித்தார். மொத்தமாக இவர் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடித்தார்.

முதல்முறையாக கோப்பையை வெல்லும் ஏபிடி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதும் தொடர்நாயகன் விருதும் வென்றார்.

Cricket’s Mr. 360, legendary batter AB de Villiers led South Africa Champions to their maiden World Championship of Legends (WCL) title as they romped over Pakistan with a nine-wicket victory at Edgbaston, Birmingham on August 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

SCROLL FOR NEXT