21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!
அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக 21 வயது வீரர் நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக 21 வயதான இளம் வீரர் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் செப்டம்பரில் 17, 19, 21 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரில் வழக்கமான இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கிற்கு பதிலாக 21 வயதான இளம் வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
செப்டம்பர் மாதம் அயர்லாந்தில் நடைபெறும் டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜேக்கப் பெத்தேல், சர்வதேச போட்டிக்கான இங்கிலாந்து அணியின் இளம் கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
1889 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வழிநடத்திய மோன்டி பௌடனுக்கு அப்போதைய வயது 23 வயது 144 நாட்களாகும்.
இன்றுவரை சர்வதேச போட்டியில் இங்கிலாந்தை வழிநடத்திய இளைய கேப்டன் என்ற சிறப்பை பெற்றுள்ள நிலையில், இதனை ஜேக்கப் பெத்தேல் முறியடிக்கவிருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஜேக்கப் பெத்தேல், இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும், வார்விக்ஷரின் 2-வது லெவன் அணியிலும் கேப்டனாக இருந்த அனுபவம் பெற்றவர்.
குறைந்த வயதில் இங்கிலாந்து கேப்டன்கள்
பெத்தேல் - 21 ஆண்டுகள் 329 நாள்கள்
பௌவுடன் - 23 ஆண்டுகள் 144 நாள்கள்
ப்ளை - 23 ஆண்டுகள் 292 நாள்கள்
அலெய்ஸ்டர் குக் - 24 ஆண்டுகள் 325 நாள்கள்
மோர்கன்- 24 ஆண்டுகள் 349 நாள்கள்
பிராட் - 25 ஆண்டுகள் 1 நாள்
பட்டர் - 25 ஆண்டுகள் 80 நாள்கள்
இங்கிலாந்து அணி விவரம்
ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), லியாம் டாசன், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்.
Jacob Bethell is set to become the youngest England men's captain
இதையும் படிக்க : மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.