மேத்திவ் பிரீட்ஜ்கி படம்: புரோட்டியாஸ் மென்.
கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

உலக சாதனை நிகழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஜ்கி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேத்திவ் பிரீட்ஜ்கி தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50-க்கும் அதிகமான ரன்களை அடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஜ்கி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர், நாதன் எல்லீஸ் ஓவரில் 88 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதற்கு முன்பாக 1987-இல் இந்தியாவின் நவஜோத் சிங் சித்து தொடர்ச்சியாக 4 முறை 50-க்கும் அதிகமான ரன்களை அடித்தார்.

இந்நிலையில், தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50க்கும் அதிகமான ரன்களை குவித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவரது சரசரி 96.67-ஆக இருக்கிறது. இதில் 3 அரைசதங்கள், 1 சதம் அடங்கும்.

மேத்திவ் பிரீட்ஜ்கியின் ஒருநாள் போட்டிகள் ரன்கள்

150 vs நியூசிலாந்து, லாகூர்.
83 vs பாகிஸ்தான், கராச்சி.
57 vs ஆஸ்திரேலியா, கைரன்ஸ்.
88 vs ஆஸ்திரேலியா, குயின்ஸ்லேன்ட்.

South African Matthew Pedersen has set a new world record.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT