முகப்பு
கிரிக்கெட்

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

Updated On : 24 ஆகஸ்ட் 2025, 5:45 pm IST
செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு - படம் | புஜாரா பதிவு
பகிர்:

செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) புகழாரம் சூட்டியுள்ளது.

புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைக் குறித்து பிசிசிஐ கௌரவ செயலர் தேவஜித் சைகியா தெரிவித்திருப்பதாவது: “புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடர் முயற்சி மற்றும் தன்னலமற்ற தன்மைக்கு சான்றாக விளங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆன்மாவை உருவகப்படுத்தியவராக அவர் திகழ்கிறார்.

Advertisement

Advertisement

எதிரணியின் பந்துவீச்சை லாவகமாக எதிர்த்து விளையாடும் அவரது திறனும், கவனச்சிதறலில்லா கூர்நோக்கும் திறனும் அவரை இந்திய பேட்டிங் வரிசையில் தடுப்புச்சுவராக மாற்றியிருக்கிறது.

இந்த விளையாட்டில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கும் மாண்புகளுக்கு உண்மையாக திகழ்வதுடன் அதேவேளையில், அதனுடன் உயர்நிலையில் வெற்றியடையலாம் என்பதற்கு அவர் ஒரு சான்று.

இந்திய கிரிக்கெட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு, சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும், சாலச்சிறந்தது.

இந்த விளையாட்டுக்கும் நாட்டுக்கும் அன்னாரது அனைத்து வித பங்களிப்புக்காகவும் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

summary

BCCI lauds Cheteshwar Pujara for his "perseverance and selflessness"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments