PTI
கிரிக்கெட்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

குறைந்த பந்துகளைச் சந்தித்து 4,000 டி20 ரன்களைக் குவித்த வீராங்கனையாக மந்தனா உருவெடுத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை :

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா படைத்தார்.

விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 25 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார். இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 ஆட்டத்தில் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

குறைந்த பந்துகளைச் சந்தித்து 4000 ரன்களைக் குவித்த வீராங்கனையாக மந்தனா உருவெடுத்துள்ளார். மந்தனா 3,227 பந்துகளில் 4,000 டி20 ரன்களைக் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைப் பட்டியலில், நியூஸிலாந்து வீராங்கனை சுஸீ பேட்ஸ் 4,716 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Smriti Mandhana became the first Indian to breach the 4,000-run mark in women's T20Is

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாங்கண்ணியில் ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

‘டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT