இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுக் கொண்டார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு ஐசிசி சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை பெற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதினை ஜஸ்பிரித் பும்ரா வென்றார். ஐசிசியின் விருதுகளை பும்ரா பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை ஐசிசி அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின்போது, ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.