நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இலங்கை வீரர் குசால் பெரேரா தனது முதல் டி20 சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.
3ஆவது போட்டியில் முதலில் விளையாடிய இலங்கைஅணி நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 218/5 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 101 ரன்களும் கேப்டன் அசலங்கா 46 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.
அடுத்து விலையாடிய நியூசிலாந்து அணி 211/7 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 69 ரன்களும் டேரில் மிட்செல் 37 ரன்களும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் தோல்வியுற்றாலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என நியூசிலாந்து தொடரைக் கைப்பற்றியது.
இலங்கை வீரர்களில் அதிவேகமாக (44 பந்துகள்) சதமடித்த வீரராக குசால் பெரேரா மாறியுள்ளார். 2025ஆம் ஆண்டின் முதல் சதமாகவும் இவரே இருக்கிறார்.
அதிவேக டி20 சதமடித்த இலங்கை வீரர்கள்
44 பந்துகள் - குசால் பெரேரா (2025)
55 பந்துகள் - திலகரத்னே தில்ஷன் (2011)
63 பந்துகள் - மஹேலே ஜெயவர்தனே (2010)
நியூசி.க்கு எதிராக அதிவேக சதம்
44 பந்துகள் - குசால் பெரேரா (2025)
45 பந்துகள் - ரிச்சர்டு லெவி (2012)
48 பந்துகள் - டேவிட் மலான் (2019)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.