யஷஸ்வி ஜெய்ஸ்வால் படம் | AP
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த டெஸ்ட் தொடரில் 391 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 43.44 ஆக உள்ளது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராகவும் அவர் உள்ளார். பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்து அசத்தினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

வலிமையாக திரும்பி வருவோம்

முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலியாவில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், இந்திய அணி மீண்டும் வலிமையாக திரும்பி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ஸ்வால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். துரதிருஷ்டவசமாக, நாங்கள் எதிர்பார்த்த முடிவு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் வலிமையாக மீண்டு வருவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறைந்தது மொத்த விலை பணவீக்கம்

ஏஐ தரவு மைய வளாகம்: கூகுள்-அதானி ஒப்பந்தம்

வேலூரில் பீமா ஜூவல்லரியின் புதிய கிளை

வன விலங்குகளிடமிருந்து பயிா்களை பாதுகாக்க கூடுதல் ஊழியா்களை நியமிக்க கோரிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT