பிரதீகா ராவல் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது: பிரதீகா ராவல்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.

DIN

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதீகா ராவல் 96 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

நல்ல தொடக்கம்

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளதாக பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இன்றையப் போட்டியில் நான் மிகவும் சிரமமின்றி விளையாடினேன். கேப்டன் ஸ்மிருதி மந்தனா என்னுடன் களத்தில் இருந்தது மிகுந்த உதவியாக இருந்தது. அவர் விளையாடுவதை மறுமுனையில் இருந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் சிறப்பாக விளையாடியது என் மீது அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவியது. எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. அதனை அப்படியே அடுத்த போட்டிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். ஆட்டத்தின் இறுதியில் தேஜல் நன்றாக விளையாடினார். ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன் என்றார்.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 12) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT