முகப்பு
கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிராக 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை...

Updated On : 15 ஜனவரி, 2025 at 11:51 PM
- @BCCIWomen
பகிர்:
Updated On : 15 ஜனவரி, 2025 at 11:41 PM

அயர்லாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி பெற்றது.

Updated On : 15 ஜனவரி, 2025 at 11:42 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று(ஜன. 15) குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 435 ரன்கள் குவித்தது.

Advertisement

முதல் விக்கெட்டுக்கு ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் இணை 233 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 135 ரன்களுக்கு (12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். பிரதிகா ராவல் 154 ரன்களில் (20 பவுண்டரி, 1 சிக்ஸர்) வீழ்ந்தார். ரிச்சா கோஷ் தன் பங்குக்கு 59 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.

Updated On : 15 ஜனவரி, 2025 at 11:43 PM

இதனையடுத்து, 436 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Updated On : 15 ஜனவரி, 2025 at 11:54 PM

3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பிரதிகா ராவல் தொடர் நாயகி விருதைப் பெற்றார். அவரே ஆட்ட நாயகியாகவும் தேர்வானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.