டி20 தொடரை வென்ற இந்திய அணி. பந்தைப் பிடித்த ராதா யாதவ்.  படங்கள்: பிடிஐ, சோனி லைவ்.
கிரிக்கெட்

ராதா யாதவ் மிரட்டல் ஃபீல்டிங்: தொடரை வென்ற இந்திய மகளிரணி!

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தொடரை வென்றது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளது.

முதலிரண்டு போட்டிகளை இந்தியா வெல்ல, 3ஆவது போட்டியை இங்கிலாந்து வென்றது. 4-ஆவது போட்டியில் மீண்டெழுந்த இந்திய மகளிரணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில், கடைசி டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 167/7 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 75 ரன்கள் குவித்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து மகளிரணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

இதில் கடைசி ஓவரில் 19.3ஆவது பந்தில் ராதா யாதவ் ஓடி வந்து பந்தினை தாவிப் பிடித்ததார். இந்த கேட்ச் விடியோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றிபெற்றாலும் 3-2 என இந்திய அணி தொடரை வென்றது.

இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக இந்திய அணி டி20 தொடரை வெல்வது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Radha Yadav takes a stunning catch to dismiss Amy Jones and fuel India’s winning chase!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT