முகப்பு
கிரிக்கெட்

காலனித்துவ காலத்தில் இருக்கிறோமா? ஓவல் பிட்ச் மோதல் பற்றி முன்னாள் வீரர்!

இந்திய பயிற்சியாளருக்கும் ஓவல் பிட்ச் மேற்பார்வையாளருக்கும் நடந்த மோதல் குறித்து...

Updated On : 30 ஜூலை, 2025 at 12:26 PM
மோதலில் ஈடுபட்ட கம்பீர் - ஓவல் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர்
பகிர்:

ஓவல் பிட்ச் மேற்பார்வையாளுடன் நடந்த மோதல் குறித்து முன்னாள் இந்திய வீரர் காலனித்துவ காலத்திலா இருக்கிறோம் எனக் கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

மான்செஸ்டர் டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தோல்வி அடையாமல் சமனில் முடித்தது.

கடைசி டெஸ்ட்டாக ஓவல் டெஸ்ட் ஜூலை 31-இல் நடைபெறவிருக்கிறது.

இதற்காக இந்திய அணி பயிற்சி செய்தபோது ஓவல் பிட்ச் மேற்பார்வையாளர்கள் பிட்சிலிருந்து 2.5 மீ தள்ளி இருக்கும்படி கூற, இந்திய பயிற்சியாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த வாக்குவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்நிலையில், முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “இங்கிலாந்து பயிற்சியாளர்கள் பிட்ச்சில் இறங்கி சோதனை செய்யலாம். ஆனால், இந்திய பயிற்சியாளர்கள் செய்யக்கூடாதா? நாம் காலனித்துவ காலத்திலா இருக்கிறோம்? ” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Even before the start of the 5th IND Vs ENG Test, tempers have started flaring up. During a practice session, India head coach Gautam Gambhir had a pretty ugly falling out with he pitch curator at The Oval, Lee Fortis.

முழு கட்டுரையைப் படிக்க →