சசித்ரா சேனநாயக் படம்: முகநூல் / சசித்ரா சேனநாயக்
கிரிக்கெட்

சூதாட்ட புகாரில் கைதான முன்னாள் இலங்கை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மீதான சூதாட்டம் குறித்து...

DIN

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ரா சேனநாயக் மீது சூதாட்டத்திற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்காக 1 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். பந்துவீச்சில் 78 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதன்முதலாக தொடங்கிய லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) தொடங்கியது.

அப்போது, கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிய இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபட அணுகியுள்ளார்.

40 வயதான சேனநாயக் துபையில் இருந்து தொலைபேசி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கையின் செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியது.

இதற்காக கைது செய்யப்பட்ட சேனநாயக் கடந்த 2023-இல் பிணையில் வெளி வந்தார்.

இந்நிலையில், இலங்கையின் அம்பாந்தோட்ட உயர் நீதிமன்றம் சூதாட்டத்தை உறுதிசெய்துள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புக்குப் பிறகு இதுதான் தேசிய அளவில் முதல் சூதாட்டமாக இருக்கிறது.

சேனநாயக் மற்றுமொரு இலங்கை வீரர் தரிந்து ரத்னநாயகேவையும் சூதாட்டத்தில் ஈடுபடவைக்க அணுகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT