FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாசிம் அக்ரமை முந்தி வரலாறு படைத்த பும்ரா!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய சாதனை குறித்து...

22 ஜூன் 2025, 10:41 am IST
ஜஸ்ப்ரீத் பும்ரா - படம்: ஏபி
பகிர்:

இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வாசிம் அக்ரமை முந்தி வரலாறு படைத்துள்ளார்.

இங்கிலாந்துடனான முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 2-ஆம் நாள் முடிவில் 209/3 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ராதான் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

இதன்மூலம், ஆசியாவிலேயே வெளிநாடுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த நபராக மாறியுள்ளார். இதற்கு முன்பாக வாசிம் அக்ரம் அந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

வெளிநாடுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வீரர்கள்

1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 147 (இந்தியா)

2. வாசிம் அக்ரம் - 146 (பாகிஸ்தான்)

3. அனில் கும்ப்ளே - 141 (இந்தியா)

4. இஷாந்த் சர்மா - 130 (இந்தியா)

5. முகமது ஷமி - 123 (இந்தியா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments