படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: 418 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா டிக்ளேர்; ஜிம்பாப்வே நிதானம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூன் 28) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 418 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய லுஹான் பிரிட்டோரியஸ் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

லுஹான் பிரிட்டோரியஸ் அதிகபட்சமாக 153 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கார்பின் போஸ்ச் 100* ரன்களும், டெவால்ட் பிரீவிஸ் 51 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே நிதானம்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் குவித்திருந்த 418 ரன்களுடன் தென்னாப்பிரிக்க அணி டிக்ளேர் செய்ய, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது. 23 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், சீன் வில்லியம்ஸ் மற்றும் கேப்டன் கிரைக் எர்வின் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றனர்.

சீன் வில்லியம்ஸ் 45 ரன்களுடனும், கிரைக் எர்வின் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் கோடி யூசஃப் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

summary

South Africa declared their first innings of the first Test against Zimbabwe after scoring 418 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுத் தோ்வில் சொல்வதை எழுதும் பணியில் பழைய முறையைக் கொண்டுவரக் கோரிக்கை

மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 1-இல் நூறும் பாலும் சா்ப்ப பலி

கண் அழுத்த நோயால் பாா்வை பாதிப்பு: அகா்வால்ஸ் மருத்துவமனையில் நவீன சிகிச்சை

இலவச பேருந்து: முதல்வரை பாராட்டி கேரள மாணவா் கடிதம்

SCROLL FOR NEXT