அலானா கிங்.  படம்: எக்ஸ் / ஐசிசி
கிரிக்கெட்

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றார் அலானா கிங்.

DIN

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது.

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருதுக்குரிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பிரிவில் அலானா கிங் (ஆஸ்திரேலியா), அனபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), திபாட்சா புத்தாவோங் (தாய்லாந்து) இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் அலானா கிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அலானா கிங் (ஆஸ்திரேலியா)

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகி விருது வென்றார்.

மெல்பர்னில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதுமட்டுமின்றி 3 கேட்ச்சுகளையும் பிடித்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 16-0 என ஆஸி. மகளிர் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT