இந்திய மகளிரணி படம்:எக்ஸ் / பிசிசிஐ மகளிர்
கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிரணி!

தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...

DIN

தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்.27ஆம் தேதி தொடங்கியது.

இதன் 5-ஆவது லீக் போட்டியில் இன்று (மே.7) கொழும்புவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 337/9 ரன்கள் குவித்தது.

இந்தியா சார்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 123 ரன்கள் அடித்து அசத்தினார். ஆட்ட நாயகி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 314/7 ரன்கள் எடுத்து தொல்வியுற்றது.

4 போட்டிகளில் 3-இல் வென்ற இந்திய அணியும் 3 போட்டிகளில் 2-இல் வென்ற இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகின.

தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி மே.11ஆம் தேதி கொழும்பிவில் நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

SCROLL FOR NEXT