என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!
உலகக் கோப்பையை வென்றதன் நினைவாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் தங்களது கைகளில் உலகக் கோப்பையை டாட்டூ போட்டுக்கொண்டதைப் பற்றி...
உலகக் கோப்பையை வென்றதை நினைவுகூரும் வகையில் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா இருவரும் தங்களது கைகளில் உலகக் கோப்பையை டாட்டூ போட்டுக்கொண்டனர்.
மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.
இந்த நிலையில், 52 ஆண்டுகளில் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை நினைவுகூரும் வகையில் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் தங்களது கைகளில் உலகக் கோப்பை - 2025 என்று பச்சை குத்திக்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் வெளியிட்டுள்ள பதிவில், “என் கையிலும் இதயத்திலும் என்றென்றும் பதிந்துவிட்டது. முதல் நாள் முதல் உனக்காகக் காத்திருந்தேன். இப்போது தினமும் காலையில் உன்னைப் பார்த்து நன்றியுடன் இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பச்சை குத்திக்கொள்வது விளையாட்டில் சகஜம்தான் என்றாலும், ஹர்மன்ப்ரீத்தும் ஸ்மிருதி மந்தனாவும் ஒரே மாதிரியாக பச்சை குத்திக்கொண்டது அவர்களின் நீண்டகால நட்பை மேலும் எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'Forever Etched In My Skin..': Harmanpreet Kaur And Smriti Mandhana Ink Special World Cup Tattoo
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.