கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. 
கிரிக்கெட்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

உலகக் கோப்பையை வென்றதன் நினைவாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் தங்களது கைகளில் உலகக் கோப்பையை டாட்டூ போட்டுக்கொண்டதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

உலகக் கோப்பையை வென்றதை நினைவுகூரும் வகையில் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா இருவரும் தங்களது கைகளில் உலகக் கோப்பையை டாட்டூ போட்டுக்கொண்டனர்.

மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.

இந்த நிலையில், 52 ஆண்டுகளில் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை நினைவுகூரும் வகையில் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் தங்களது கைகளில் உலகக் கோப்பை - 2025 என்று பச்சை குத்திக்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் வெளியிட்டுள்ள பதிவில், “என் கையிலும் இதயத்திலும் என்றென்றும் பதிந்துவிட்டது. முதல் நாள் முதல் உனக்காகக் காத்திருந்தேன். இப்போது தினமும் காலையில் உன்னைப் பார்த்து நன்றியுடன் இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பச்சை குத்திக்கொள்வது விளையாட்டில் சகஜம்தான் என்றாலும், ஹர்மன்ப்ரீத்தும் ஸ்மிருதி மந்தனாவும் ஒரே மாதிரியாக பச்சை குத்திக்கொண்டது அவர்களின் நீண்டகால நட்பை மேலும் எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'Forever Etched In My Skin..': Harmanpreet Kaur And Smriti Mandhana Ink Special World Cup Tattoo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

அழகின் சம்மேளனம்... சமந்தா!

SCROLL FOR NEXT