முகப்பு
கிரிக்கெட்

என் சாதனைகளை மறந்து விடாதீர்கள்... வரலாற்றுத் தோல்விக்குப் பின் கம்பீர் பேட்டி!

வரலாற்றுத் தோல்விக்குப் பிறகு பயிற்சியாளர் கம்பீர் பேசியதாவது...

Updated On : 26 நவம்பர் 2025, 3:48 pm IST
ஆடுகளத்தை சோதனை செய்யும் பயிற்சியாளர் கம்பீர். - படம்: ஏபி
பகிர்:

தென்னாப்பிரிக்க அணியுடனான வரலாற்றுத் தோல்விக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திமிராகப் பேசியுள்ளார்.

என்னை நீக்குவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம். ஆனால் என்னுடைய வெற்றியை நினைத்துப் பாருங்கள் எனப் பேசியது சர்ச்சையாகி வருகிறது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, நியூசிலாந்து உடன் இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என தோற்றது.

என் சாதனைகளையும் கவனியுங்கள்

இந்தத் தோல்வி குறித்து கம்பீர் பேசியதாவது:

என்னுடைய எதிர்காலத்தை பிசிசிஐ முடிவு செய்யலாம். ஆனால், இங்கிலாந்திலும் சாம்பியன்ஸ்டிராபியிலும் வெல்ல காரணமாக இருந்ததும் இதே ஆள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குற்றம் சுமத்துதல் எல்லோர் மீதும் இருக்கிறது. அது என்னில் இருந்து தொடங்கட்டும்.

தனிமனிதரை குறைகூறமாட்டேன்...

நாங்கள் இன்னமும் கவனமாக விளையாடியிருக்க வேண்டும். 95/1 லிருந்து 122/7 என்பதை ஏற்கமுடியவில்லை. இதற்காக ஒரு வீரரையோ அல்லது ஒரு ஷாட்டையோ குறைகூற முடியாது.

அனைவரின் மீதும் தவறிருக்கிறது. நான் தனிமனிதரை குறைகூறமாட்டேன்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அதீத திறமைசாலிகள் தேவையில்லை; குறைவான திறமைகளுடன் வலுவான மனநிலைக் கொண்டவர்களே போதுமானது.

அவர்களே நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டர்களை உருவாக்குவார்கள் என்றார்.

summary

Under-fire India head coach Gautam Gambhir on Wednesday said it was up to the BCCI to decide his future after the Test series whitewash against South Africa but also reminded everyone of the success the team has achieved in his tenure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments