நடாலி ஷிவா் 
கிரிக்கெட்

நடாலி ஷிவா் அதிரடி: இங்கிலாந்து 253/9

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 253/9 ரன்களை சோ்த்தது.

தினமணி செய்திச் சேவை

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 253/9 ரன்களை சோ்த்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்புவில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்ய

களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவா்களில் 253/9 ரன்களை சோ்த்தது. அணியின் கேப்டன் நடாலி ஷிவா் அற்புதமாக ஆடி 2 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 117 ரன்களைக் குவித்தாா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.

பௌலிங்கில் இலங்கை தரப்பில் ஐனோகா ரணவீரா 3, உதேஷிகா, சுகந்திகா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

254 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி இரண்டாவதாக ஆடத் தொடங்கியது.

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

SCROLL FOR NEXT