இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்ரல் 3) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸுக்கு, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். குறிப்பாக, பிரியான்ஷ் ஆர்யா அதிரடியில் மிரட்டினார். அவர் 11 பந்துகளில் 39 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தார். அவரது அதிரடியான ஆட்டம் அவருக்குப் பிறகு களமிறங்கிய வீரர்கள் எந்தவொரு அழுத்தமுமின்றி விளையாட உதவியது.
Advertisement
இந்த நிலையில், அதிரடியாக விளையாடிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிரியான்ஷ் ஆர்யா மிகவும் அபாரமாக விளையாடினார். அவர் பந்துகளின் லென்த்தை சிறப்பாக கணித்து சிக்ஸர்கள் விளாசினார். மாட் ஹென்றி மற்றும் கலீல் அகமதின் பந்துவீச்சில் அவர் அபாரமாக விளையாடினார். அவர் லெக் திசையில் மிகவும் நன்றாக விளையாடக் கூடியவர். ஆஃப் திசையிலும் அவரால் நன்றாக விளையாட முடியும். அதனால் அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் என்றார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.