புலி வந்துவிட்டது... தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் இந்தியா வந்தடைந்தது குறித்து...
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (36 வயது) இந்தியா வந்தடைந்தார். தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் இவர் தற்போது அணியில் இணைந்துள்ளார்.
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிலேயே இருந்த மிட்செல் ஸ்டார்க், தற்போது தடையில்லாச் சான்று கிடைத்தவுடன் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளார்.
ஆஷஸ் தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருது வென்றார். பின்னர் பிபிஎல் தொடரிலும் விளையாடினார். 2025ல் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு சமீபத்தில் விஸ்டன் விருதும் வழங்கப்பட்டது.
Advertisement
கடந்த சீசனில் மிட்செல் ஸ்டார்க் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். தற்போது தில்லி அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனில், மே1ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தில்லி கேபிடல்ஸ் ”புலி வந்துவிட்டது” என மிட்செல் ஸ்டார்க் வருகைக்கு விடியோ வெளியிட்டுள்ளது. தில்லி அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.