டி20 உலகக் கோப்பையின் 25-ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
நேபாளத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமென்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை வாக்னடேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
நேபாளம் அணி 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது.
ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். குரூப் சி பிரிவில் 4 புள்ளிகளுடன் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தப் போட்டியில் வென்றால், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
2 போட்டிகளில் தோல்வியுற்ற நேபாளம் அணி முதல் வெற்றிக்காகப் போராடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.