உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதைத் தொடர்ந்து மற்றொரு வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தில் ஆர்சிபி களமிறங்கியுள்ளது.
மெக் லானிங் தலைமையிலான உ.பி. வாரியன்ஸ் அணி இதற்கு முந்தைய போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுடன் இந்தத் தொடரை தொடங்கியுள்ளது. இதனால், இம்முறை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
Advertisement
Advertisement
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நவி மும்பையில் இன்று (ஜன.12) நடைபெற்ற 5 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் மெக் லானிங், ஹர்லீன் தியோல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
Womens Premier League Royal Challengers Bengaluru Women vs UP Warriorz Women
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.