11 பந்துகளில் அரைசதம்..! உலக சாதனையுடன் இலங்கையைப் பழிதீர்த்த சூர்யவன்ஷி!
இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி குறித்து...
முத்தரப்பு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
டாஸ் வென்ற இலங்கை ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா ஏ அணி பேட்டிங் செய்து வருகிறது. 28 ஓவர்கள் முடிவில் இந்தியா 221/3 ரன்கள் குவித்துள்ளது.
iந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடினார். 11 பந்துகளில் அரைசதம் (4,4,4,6,6,0,6,4,4,6,6) அடித்து உலக சாதனை படைத்தார். பின்னர், 29 பந்துகளில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement
தற்போது, களத்தில் திலக் வர்மா 42*, குமார் குஷாக்ரா 4* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். இதற்கிடையில் ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் அடித்து அசத்தினார்.
முன்னதாக, இந்தத் தொடரில் இந்தியா ஏ அணி இலங்கை ஏ அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியுற்றது. இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியை இலங்கை அணியினர் ஏதோ திட்ட, அவர்களை நோக்கி பாய்ந்த சூர்யவன்ஷியின் விடியோ வைரலானது.
இலங்கை அணியினர் நடந்துகொண்ட விதத்துக்கு தற்போது அவர்களை சூர்யவன்ஷி பழிதீர்த்ததாக இந்திய ரசிகர்கள் குதூகலமாக இருக்கிறார்கள்.