யு19 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸின் கடைசி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கின்றன.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதுக்கு செல்லுமென்பதால் கூடுதல் சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.
யு19 உலகக் கோப்பைப் போட்டிகள் நமீபியா, ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தேர்வாக, குரூப் 2-ல் இங்கிலாந்து அணி மட்டுமே தேர்வாகியுள்ளன.
மீதமிருக்கும் ஓர் இடத்திற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டியிடுகின்றன.
புள்ளிப் பட்டியலில் 6 (+3.337) புள்ளிகளுடன் இந்திய அணி சற்று அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியோ 4 ( +1.484) புள்ளிகளுடன் இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் ரேட்டில் வெற்றிப்பெற கட்டாயத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.