டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பேட்டிங்; வரலாறு படைக்குமா?
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாதில் இன்று (மார்ச் 8) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் கோல் மெக்கோன்ஹிக்குப் பதிலாக ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் போட்டியை நடத்தும் நாடு இதுவரை கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறும், தொடர்ச்சியாக ஒரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறும் தொடர்கிறது. இந்த வரலாற்றை இந்திய அணி மாற்றியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.