மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள்; கே.எல்.ராகுல் தனித்துவமான சாதனை!
ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள் குவித்து கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக 1000 ரன்கள் குவித்து கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (மே 8) நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி 1000 ரன்கள் குவித்துள்ள முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார்.
Advertisement
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள கே.எல்.ராகுல், அந்த அணிகளுக்காக 1000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். அதேபோல, தில்லி கேபிடல்ஸ் அணிக்காக அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 23 இன்னிங்ஸ்களில் கே.எல்.ராகுல் 1000 ரன்களைக் கடந்துள்ளார். முன்னதாக, ஜேபி டுமினி மற்றும் ரிஷப் பந்த் இருவரும் 35 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்திருந்ததே அதிவேகமானதாக இருந்தது.
மூன்று வெவ்வேறு அணிகளுக்காக கே.எல்.ராகுல் 1000+ ரன்கள்
பஞ்சாப் கிங்ஸ் - 2548 ரன்கள்
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 1410 ரன்கள்
தில்லி கேபிடல்ஸ் - 1002 ரன்கள்