முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல் தொடரிலிருந்து இரண்டு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விலகல்!

நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து இரண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விலகியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் - படம் | AP
பகிர்:

நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து இரண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விலகியுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், நான்காவது இடத்துக்கு ஐந்து அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஏற்கெனவே வெளியேறிவிட்டன.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான குயிண்டன் டி காக் மற்றும் ராஜ் அங்கத் பவா காயம் காரணமாக விலகியுள்ளனர்.

Advertisement

Advertisement

சன்ரைசர்ஸுக்கு எதிராக மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற போட்டியின்போது, டி காக்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, மற்றொரு மும்பை வீரரான ராஜ் அங்கத் பவாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்த இரண்டு வீரர்களும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர்.

இந்த சீசனில் டி காக் மற்றும் ராஜ் அங்கத் பவா இருவரும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி அதன் கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.

summary

Two Mumbai Indians players have withdrawn from the remaining matches of the ongoing IPL season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.