14-வது ஐபிஎல் சீசனில் முதல் ஆட்டத்தில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14-வது ஐபிஎல் சீசனின் 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதுகின்றன. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறை பலம் வாய்ந்த அணியாக வெற்றி முனைப்பில் களமிறங்குகிறது.
இந்த நிலையில், முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தில் வாட்சன் பதிவிட்டுள்ளது:
"இந்த சீசனின் முதல் ஆட்டத்துக்கு வாழ்த்துகள். 4-வது முறையாக ஐபிஎல் பட்டத்தை பெறுங்கள். விசில் போடு"
கடந்த ஐபிஎல் சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பிரதான வீரராக ஷேன் வாட்சன் இருந்தார். கடந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.