தில்லி கேபிட்டல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட்-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கேபிட்டல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பார்ஹார்ட். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தில்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் தில்லி அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் 2-ல் வெற்றியும் 2-ல் தோல்லியும் சந்தித்துள்ளது. தில்லி கேபிட்டல்ஸ் அணி சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.