ஐபிஎல்

தில்லி போராட்டம் வீண்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

DIN

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 34ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 116(65 பந்துகள்), தேவ்தத் படிக்கல் 54, கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 46 ரன்கள் குவித்தனர்.

இமாலய இலக்கை விரட்டிய தில்லி அணி கடைசி ஓவர் வரை வெற்றி பெற போராடியது. இருப்பினும், 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தில்லி அணியில் அதிகபட்சமாக பண்ட் 44, லலித் யாதவ் 37, பிரித்வி ஷா 37, கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்கள் விளாசிய பெளவெல் 36 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT