புனே: தேர்வுக்குழுவில் அணியின் பொறுப்பாளரும் பங்கேற்றுக் கொள்வதாக கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஷ் ஐயர் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மறுத்துள்ளார்.
ஐபிஎல்2022 61வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி. இதற்க்கு முந்திய போட்டியில் தேர்வுக்குழுவில் அணியின் பொறுப்பாளரும் பங்கேற்றுக்கொள்வதாக கருத்து கூறியிருந்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஷ் ஐயர். இது கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
நேற்றைய ஆட்ட முடிவில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஷ் ஐயர், “ விலையாடத வீரர்களை ஆறுதல் படுத்தவே அணியின் பொறுப்பாளர் பங்கேற்பார். இது அவர்களுக்கு கூடுதல் சுமையான வேலை. நான் இதைத் தான் கூற முயன்றேன். அது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது” என கூறினார்.