ஐபிஎல்

பட்லர் அதிரடி சதம்: இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான்

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

DIN

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் நடப்பு தொடரின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 58 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 19வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

ராஜஸ்தான் அணியின் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் ராஜஸ்தான் மோதவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT